Posts

தலைமைத்துவமும் தலைமுறையும் - 5

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 5   தலைமைத்துவமும்  தலைமுறையும் www.sinegithan.in சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டபோது,  அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான் (1இராஜா. 11:43). அப்பொழுது, ஜனங்கள் ரெகொபெயாமை நோக்கி, 'உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்' என்று சொன்னபோது, ரெகொபெயாம் ஜனங்களை நோக்கி, 'நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள்' (1 இராஜா. 12:4,5) என்று அனுப்பிவிட்டு, தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் ரெகொபெயாமை நோக்கி, 'நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வ

சுகம் தேடாமல், சுமை தாங்கும் தோள்கள் - 4

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 4 சுகம் தேடாமல்,  சுமை தாங்கும் தோள்கள் - 4 தலைமைத்துவம் என்பது, தங்கள் சுமைகளை எளிதாக்கிக்கொள்வது அல்ல; மாறாக, சுமப்பதற்கரிதான சுமைகளுக்காகவும் தங்கள் தோள்களை ஆயத்தப்படுத்திக்கொள்வது.   தலைமைத்துவம் என்பது தங்களுடைய சுமைகளையும் மற்றவர்களின் தோள்களின் மேல் இறக்கிவைப்பதல்ல; மாறாக, மற்றவர்களுடைய சுமைகளையும் தங்கள் தோள்களின் மேலே ஏற்றிக்கொள்வது. புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் (மத். 20:25-27) என்பதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. 'நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது' (அப். 20:34) என்பதுதானே அப்போஸ்த

நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3

தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 3 நம்முடைய ஓட்டமல்ல,  தேவனுடைய ஓட்டம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைத்ததும், நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதோர் சத்தியம், 'நாம் நமக்காக அல்ல, பரலோகத்தில் வீற்றிருக்கும் பிதாவுக்காகவே ஓடத் தொடங்கியிருக்கின்றோம்' என்பதே.  ஊழியத்தின் பாதையிலும், நமது ஓட்டத்தைத் தொடங்கும் முன் எழுதப்படவேண்டிய ஆரம்ப வரிகளும் இவைகளே. சிலுவையில் இயேசு  கிறிஸ்து செய்து முடித்த பிதாவின் சித்தத்திற்குள் பொதிந்திருக்கும் இந்த இரகசியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய சிந்தையிலிருந்து நாம் சிதறச் செய்துவிடக்கூடாது. எத்தனையோ வியாதியஸ்தகளை குணமாக்கியபோதிலும், திரளான ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்திருந்தபோதிலும், பிதாவின் வார்த்தைகளை தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசித்திருந்தபோதிலும்,  அநேகரை போஷித்திருந்தபோதிலும், பலருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகளை நிறைவாக்கியிருந்தபோதிலும், மக்களாலேயே மதிக்கப்படாமலிருந்த மனிதர்களை கரங்களால் தொட்டு சுகமாக்கியிருந்தபோதிலும், பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த ஜனங்களை கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினபோத

மனிதனானாலும், மண்ணே! - 2

Image
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 2 மனிதனானாலும்,  மண்ணே!  வேகமாக ஓடும் வாழ்க்கை தலைவர்களாகிய நாம் தேவன் நம்மை பயன்படுத்தும் வழிகளில் சந்தோஷித்திருந்தாலும், ஆனந்தத்தினால் அனுதினமும் நிறைந்திருந்தாலும்,  அழைப்பின் மையத்திலேயே இருந்து நாம் பணி செய்துகொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் ஆர்ப்பரிப்பின் சத்தங்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டேயிருந்தாலும், நம்முடைய வாழ்க்கையிலிருந்து நாம் விடைபெறும் நாள் இப்பூமியில் நெருங்கும்போது, தேவனால் நமக்குக் குறிக்கப்பட்ட காலம் இத்தரையில் நிறைவடையும்போது, அவர் தெரிந்தெடுக்கும் மனிதர்களிடத்தில் தயாள மனதுடன் அதனை அளித்துவிட நாம் எப்பொழுதும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதே வேதம் தரும் போதனை.  ஆதிப் பிதாக்களாகிய ஆதாமும், ஏவாளும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமற்போனபோது, இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்

வெற்றியா? வெற்றிடமா? - 1

Image
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 1 வெற்றியா? வெற்றிடமா? தன்னை மட்டுமே முக்கியப்படுத்தி, சுற்றியிருப்பதெல்லாவற்றையும் மக்கிப்போகச் செய்து, வாழ்க்கையின் விளிம்பைத் தொடும்போதுகூட தன்னிடத்திலிருப்பதை எவரிடத்திலும் எடுத்துக்கொடுக்கும் மனதற்றவர்களாகவே மரித்துப்போகும் மனிதர்கள் இவ்வுலகத்தில் ஏராளம் ஏராளம். நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத் 20:15) என்ற வசனத்தின்படி, தயாளமாய், தாராளமாய் மனமுவந்து தேவன் தன்னிடத்தில் அள்ளிக் கொடுத்தவைகளை, மற்றவர்களிடத்தில் ஒப்புவிக்கும்போது, அதே தயாள குணத்தோடும், தாராளமான மனதோடும் ஒப்புவிக்க மனதற்றவர்களாகவும், கிள்ளிகூடக் கொடுக்கும் குணமற்றவர்களாகவும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றைய நாட்களில் மிகுதியே. என்னைப் போன்றதோர் மனிதன் இனி தேவனால் தெரிந்துகொள்ளப்படப்போவதில்லை, என்னைப்போல இன்னொரு மனிதனை தேவன் ஆயத்தப்படுத்தப்போவதில்லை, எனக்கே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, என்னைப் போல தாலந்துகள் நிறைந்த தலைவன் உருவாவது கடினமே, என்னைப் போன்ற சிலரது சிரசுகளில் மாத்திரமே இத்தகைய கர்த்தரின் அபிஷேகம் தங்கியிருக்கின்றத

முன்னுரை

 முன்னுரை பரிசுத்தத்திற்கென்றும், பரலோகத்திற்கென்றும் அழைத்து நம்மை முன்குறித்திருக்கின்ற தேவனின் நாமத்தில் அன்பின் வாழ்;த்துக்கள். வாலிபர்கள் மத்தியில் வாலிபராய் நாம் ஆற்றும் பணி வளரும் தலைமுறையினரைத் தலைவர்களாக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், தேவனின் நாமத்தில், தேவனைச் சுமந்தவர்களாய், தேசத்திற்குள் புகுந்து சத்துருவின் கரத்திலுள்ள நம் சகோதரரை மீட்கும் பணியில், தகுதியுள்ள தலைவர்களாக நாம் எப்படி செயலாற்றவேண்டும் என்பதை தொடர்ச்சியாக எழுத விரும்புகின்றேன்.  'கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை' (1தீமோ. 3:1) என்பதே தலைமைத்துவத்தைக் குறித்து பவுல் கொடுக்கும் முதல் அறிக்கை .  என்றபோதிலும், அதைத் தொடர்ந்து, கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும் என்றும், அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிரு