தலைமைத்துவமும் தலைமுறையும் - 5
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 5 தலைமைத்துவமும் தலைமுறையும் www.sinegithan.in சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டபோது, அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான் (1இராஜா. 11:43). அப்பொழுது, ஜனங்கள் ரெகொபெயாமை நோக்கி, 'உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம்' என்று சொன்னபோது, ரெகொபெயாம் ஜனங்களை நோக்கி, 'நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள்' (1 இராஜா. 12:4,5) என்று அனுப்பிவிட்டு, தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் ரெகொபெயாமை நோக்கி, 'நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வ