தேவனையே நம்பும் தலைவன் - 16
தேவனையே நம்பும் தலைவன் 'நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.' 1 சாமுவேல் 17:45 தலைமைத்துவம் என்பது, நம் உடன் இருக்கும் மனிதர்கள் மீதோ, அல்லது சகோதரர்கள் மீதோ அல்லது உடன் பணிசெய்வோர் மீதோ அதிகாரம் செலுத்துவது அல்ல; மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரின் தோள்களின் மீது வைத்துள்ள பொறுப்பை சுமையாக அல்ல சுகமானதாக உணர்ந்தவர்களாக அதனை ஏற்றுக்கொள்வதும், தேவன் ஒருவரை மாத்திரமே முழுவதும் நம்பிச் சார்ந்தவர்களாக வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும், பாதைகளிலும் மற்றும் பணிகளிலும் முன்னேறிச் செல்வதுமாகும். தலைமைத்துவத்தை அடைந்ததும், தேவனை விட்டுத் தூரமாகச் சென்றுவிடும் தலைவர்கள் பலர், 'தலைவர்கள்' என்று பிறரால் போற்றப்பட்டாலும், தேவனற்றவர்களாக, அதாவது தேவ தயவோ உதவியோ துணையோ இல்லாதவர்களாக தனித்தே விடப்பட்டுவிடுகின்றனர் என்பது பரிதாபத்திற்குரிய செய்தியே! 'என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அ...