இளந்தலைமுறையினரை உருவாக்குவதில் இன்றைய சபையின் பங்கு
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜெபப் பங்காளரே, நமக்கு முன்பாகப் புறப்பட்டு, 'முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலினால் நம்மை எழுப்புகிறவரும்" (2 சாமு. 5:24), 'நீ எங்கே இருக்கிறாய்?" (ஆதி. 3:9) என்றும், 'இங்கே உனக்கு என்ன காரியம்?" என்றும் (1 இராஜா. 19:9), 'நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ?" என்றும் நமது இருப்பிடங்களை உணரச் செய்கிறவரும், நமது நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்துகிறவரும் (சங். 17:5), நமது ஆத்துமாவை மரணத்துக்கும், நமது கால்களை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவருமாகிய (சங். 56:13) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்! 'சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற" அவருக்குள் நம்மை பரிபூரணமுள்ளவர்களாகப் பாதுகாத்துவருகின்ற தேவனுக்கே (கொலோ. 2:10) எல்லா துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக! பிரியமானவர்களே! கிருபையினாலே ஆயுசுநாட்களை அவர் நமக்குக் கூட்டிக்கொடுத்தாலும், காரணங்களுடனேயே அவைகள் நமக்கு நீட்டித்தரப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளின் தொடக்கத்தி...