நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் - 3
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 3 நம்முடைய ஓட்டமல்ல, தேவனுடைய ஓட்டம் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் அடியெடுத்து வைத்ததும், நாம் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமானதோர் சத்தியம், 'நாம் நமக்காக அல்ல, பரலோகத்தில் வீற்றிருக்கும் பிதாவுக்காகவே ஓடத் தொடங்கியிருக்கின்றோம்' என்பதே. ஊழியத்தின் பாதையிலும், நமது ஓட்டத்தைத் தொடங்கும் முன் எழுதப்படவேண்டிய ஆரம்ப வரிகளும் இவைகளே. சிலுவையில் இயேசு கிறிஸ்து செய்து முடித்த பிதாவின் சித்தத்திற்குள் பொதிந்திருக்கும் இந்த இரகசியத்தை எக்காரணத்தைக் கொண்டும் நம்முடைய சிந்தையிலிருந்து நாம் சிதறச் செய்துவிடக்கூடாது. எத்தனையோ வியாதியஸ்தகளை குணமாக்கியபோதிலும், திரளான ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்திருந்தபோதிலும், பிதாவின் வார்த்தைகளை தன்னைத் தேடிவரும் ஜனங்களுக்கு உபதேசித்திருந்தபோதிலும், அநேகரை போஷித்திருந்தபோதிலும், பலருடைய வாழ்க்கையில் காணப்பட்ட குறைவுகளை நிறைவாக்கியிருந்தபோதிலும், மக்களாலேயே மதிக்கப்படாமலிருந்த மனிதர்களை கரங்களால் தொட்டு சுகமாக்கியிருந்தபோதிலும், பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த ஜனங்களை கட்டுகளிலிருந்து விடுதலையாக்கினபோத