வெற்றியா? வெற்றிடமா? - 1
தலைவனும், தலைமுறையும் www.sinegithan.in தொடர் - 1 வெற்றியா? வெற்றிடமா? தன்னை மட்டுமே முக்கியப்படுத்தி, சுற்றியிருப்பதெல்லாவற்றையும் மக்கிப்போகச் செய்து, வாழ்க்கையின் விளிம்பைத் தொடும்போதுகூட தன்னிடத்திலிருப்பதை எவரிடத்திலும் எடுத்துக்கொடுக்கும் மனதற்றவர்களாகவே மரித்துப்போகும் மனிதர்கள் இவ்வுலகத்தில் ஏராளம் ஏராளம். நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா? (மத் 20:15) என்ற வசனத்தின்படி, தயாளமாய், தாராளமாய் மனமுவந்து தேவன் தன்னிடத்தில் அள்ளிக் கொடுத்தவைகளை, மற்றவர்களிடத்தில் ஒப்புவிக்கும்போது, அதே தயாள குணத்தோடும், தாராளமான மனதோடும் ஒப்புவிக்க மனதற்றவர்களாகவும், கிள்ளிகூடக் கொடுக்கும் குணமற்றவர்களாகவும் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை இன்றைய நாட்களில் மிகுதியே. என்னைப் போன்றதோர் மனிதன் இனி தேவனால் தெரிந்துகொள்ளப்படப்போவதில்லை, என்னைப்போல இன்னொரு மனிதனை தேவன் ஆயத்தப்படுத்தப்போவதில்லை, எனக்கே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றது, என்னைப் போல தாலந்துகள் நிறைந்த தலைவன் உருவாவது கடினமே, என்னைப் போன்ற சிலரது சிரசுகளில் மாத்திரமே இத்தகைய கர்த்தரின் அபிஷேகம் தங்கியிருக்கின்றத